![IMF பணிப்பாளரை அழைக்க தயார்: ஜனாதிபதி ரணில்! IMF பணிப்பாளரை அழைக்க தயார்: ஜனாதிபதி ரணில்!](https://uthayamnews.com/wp-content/uploads/2024/01/imf.jpg)
IMF பணிப்பாளரை அழைக்க தயார்: ஜனாதிபதி ரணில்!
வாக்குறுதி அரசியலே நாட்டின் பொருளாதாரத்தை அழிவுக்கு இட்டுச் சென்றது. எனவே, தேர்தலொன்றுக்கு தயாராகும் அனைத்து அரசியல் கட்சிகளும் நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டத்தைத் கொண்டிருக்க வேண்டியது அவசியமென வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற சுங்கத் தின நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்
சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளரை நாட்டுக்கு அழைக்க தான் தயாராக இருப்பதாகவும், மாற்றும் யோசனைகள் இருக்கும் பட்சத்தில் அது தொடர்பில் கலந்துரையாட முன்வருமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
CATEGORIES Uncategorized