அயல்வீட்டு பெண்ணால் சசிகலா ரவிராஜின் வீட்டிற்கு கல்வீச்சு; பொலிஸிலும் முறைப்பாடு

அயல்வீட்டு பெண்ணால் சசிகலா ரவிராஜின் வீட்டிற்கு கல்வீச்சு; பொலிஸிலும் முறைப்பாடு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது இன்று கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அயல் வீட்டில் உள்ள கட்சி ஒன்றின் ஆதரவாளரான பெண் ஒருவராலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சசிகலா ரவிராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தாக்குதல் மேற்கொண்ட பெண்ணினால் சசிகலா தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This