ஜனாதிபதிக்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு; உதய கம்மன்பில!

ஜனாதிபதிக்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு; உதய கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வெளியிடத் தயங்கும் இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நாளை (21) காலை 10.00 மணியுடன் நிறைவடைவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பகிரங்கப்படுத்தத் தயங்கும் இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு நான் வழங்கிய கால அவகாசம் நாளை காலை 10.00 மணியுடன் முடிவடைகிறது.

அறிக்கைகளை வெளியிடுவதற்கும் அரசியலமைப்புப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கும் ஜனாதிபதிக்கு நாளை காலை வரை அவகாசம் உள்ளது.

எனவே, அரசியலமைப்பின் 38 ஆவது சரத்தை ஜனாதிபதி மீறினாலோ நாளை அறிக்கைகளை வெளியிடத் தவறினாலோ, நான் நிச்சயமாக அவற்றை பகிரங்கப்படுத்துவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

CATEGORIES
Share This