பிரித்தானிய மன்னரின் முக்கியத்துவம் மிக்க அவுஸ்திரேலிய பயணம்!

பிரித்தானிய மன்னரின் முக்கியத்துவம் மிக்க அவுஸ்திரேலிய பயணம்!

பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் இந்த வாரம் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர்.

அரச தம்பதியினர் ஆறு நாள் சுற்றுப்பயணத்தை வெள்ளிக்கிழமை (18) தொடங்குவார்கள்.

அரியணை ஏறிய பிறகு சார்லஸின் முதல் அவுஸ்திரேலிபய் பயணம் இதுவாகும்.

பிரித்தானிய அரசர் ஒருவர் அவுஸ்திரேலியாவிற்கு வருவது இதுவே முதல் முறை என்பதாலும் இந்த விஜயம் முக்கியத்துவம் பெறுகிறது.

வெள்ளிக்கிழமை மாலை முதல் எதிர்வரும் புதன்கிழமை (23) வரை பிரித்தானிய மன்னரும் அவரது மனைவியும் அவுஸ்திரேலியாவில் இருப்பார்கள்.

அரச சுற்றுப்பயணம் சிட்னி மற்றும் கான்பெராவில் நிகழ்வுகளை உள்ளடக்கியது.

The Conversation இன் கூற்றுப்படி, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் குடும்ப வன்முறை போன்ற வெளிப்படையான “அரசியல் அல்லாத” பிரச்சினைகள் தொடர்பில் இந்த விடயத்தில் கவனம் செலுத்தப்படும்.

ஒக்டோபர் 21 மற்றும் 26 க்கு இடையில் சமோவா தலைநகர் அபியாவில் நடைபெறும் பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டிலும் அவர் கலந்து கொள்கிறார்.

75 வயதான மன்னரின் தொடர்ச்சியான புற்றுநோய் சிகிச்சையின் காரணமாக பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

CATEGORIES
Share This