![குவைத்தில் பயங்கர தீ விபத்து- 41 பேர் உயிரிழப்பு குவைத்தில் பயங்கர தீ விபத்து- 41 பேர் உயிரிழப்பு](https://uthayamnews.com/wp-content/uploads/2024/06/kuwait.jpg)
குவைத்தில் பயங்கர தீ விபத்து- 41 பேர் உயிரிழப்பு
குவைத்தில் கேரளாவை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான அடுக்கு மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீயை கட்டுக்குள் கொண்டுவர மீட்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.