விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு!

விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டு மைதானத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து நேற்று (08) மாலை அந்த இடத்திலே அகழ்வு பணி இடம்பெற்றது.

கொழும்பு நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த அகழ்வுப் பணியானது கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் எந்தவித பொருட்களும் கிடைக்காத நிலையில் இன்றும் குறித்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This