ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவு: தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவு: தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு?

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி உள்ளிட்ட தேசிய மக்கள் சக்திக்கு , ஆதரவு வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் கூறியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு கூறியுள்ளதாக குறித்த செய்தி தெரிவிக்கின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இடதுசாரி குழுவினர் என அவர்களை அடையாளப்படுத்தியுள்ளனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஹெக்டர் பெத்மகே கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கு மேலதிகமாக, சட்டத்தரணி கீர்த்தி உடவத்த, தேசிய அமைப்பாளர் கே.பி. குணவர்தன ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த பிரிவினரிடமிருந்து ஆதரவை பெறுவதா இல்லையா என்பது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி இதுவரையில் எதுவித பதிலும் வழங்கவில்லை எனவும் அறியக் கிடைத்துள்ளது.

CATEGORIES
Share This