இலங்கையில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றாலும் தமிழக மீனவர்களை பொறுத்தவரை பழைய நிலையே தொடர்கின்றது

இலங்கையில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றாலும் தமிழக மீனவர்களை பொறுத்தவரை பழைய நிலையே தொடர்கின்றது

இலங்கையில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றாலும் மீனவர்களை பொறுத்தவரை பழைய நிலையே தொடர்வது வேதனையளிக்கின்றது என முன்னாள் தமிழக முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் துன்புறுத்தப்படுவதும் தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றத்தால் மிகப் பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படுவதும் தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது இவை மீனவர்கள் மத்தியில் அமைதியின்மையையும்இ ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது

இதுபோன்ற தொடர் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் மூலம் தமிழக மீனவர்களின் மத்தியில் ஓர் அச்சத்தை ஏற்படுத்த இலங்கை அரசு முயற்சிக்கிறது “இது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை. இந்திய எல்லைக்குட்பட்ட பாரம்பரியமான இடங்களில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வது என்பது தமிழக மீனவர்களின் உரிமை. இந்த உரிமையை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் மத்தியஇ மாநில அரசுகளுக்கு உண்டு”

“தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனையை இலங்கை அதிபரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இந்தியாவின் வலுவான எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும். இனி வருங்காலங்களில் தமிழக மீனவர்கள் அமைதியாக மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளவும் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்கவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அரசும் மத்திய அரசுக்குத் தேவையான தொடர் அழுத்தத்தினை அளிக்க வேண்டும்

CATEGORIES
Share This