காரில் இருந்து ஐவர் சடலமாக மீட்பு: கடன் தொல்லையால் தற்கொலை

காரில் இருந்து ஐவர் சடலமாக மீட்பு: கடன் தொல்லையால் தற்கொலை

தமிழகம், புதுக்கோட்டை மாவட்டம் நமனசமுத்திரம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து ஐந்து பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் தொல்லை காரணமாக குறித்த அனைவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு தாய் மகள், தந்தை மகன் மாமியார் உறவு முறையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதனையடுத்து காரில் சோதனை மேற்கொண்ட பொலிஸார் அதிலிருந்து கடிதம் ஒன்றையும் மீட்டுள்ளனர்.

அதில் கடன் தொல்லை காரணமாக ஐவரும் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்துகொண்டவர் தொழில் அதிபர் எனவும் அவர் புதுக்கோட்டை சிப்காட் பகுதியில் தொழில் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களை பொலிஸார் வெளியிட்டிருக்கவில்லை.

தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

தற்கொலை செய்தவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This