இலங்கை தமிழரசுக் கட்சி யாருக்கு ஆதரவு?: வெளியானது தீர்மானம் மிக்க முடிவு

இலங்கை தமிழரசுக் கட்சி யாருக்கு ஆதரவு?: வெளியானது தீர்மானம் மிக்க முடிவு

இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது.

திருகோணமலை தமிழரசுக் கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, தமிழ் பொது வேட்பாளருக்கு திருகோணமலை வாழ் மக்களதும் மக்கள் பிரதிநிதிகளதும் ஏகோபித்த ஆதரவினை வழங்க தீர்மானித்திருப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த விடயம் தொடர்பாக மத்திய குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி அது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் எனவும்அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனுடன் பிரதேச சபை மற்றும் நகரசபை முன்னாள் உறுப்பினர்களுக்கும் கலந்துரையாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This