தமிழரசுக் கட்சி யாருக்கு ஆதரவு? – வெளியான அறிவிப்பு!

தமிழரசுக் கட்சி யாருக்கு ஆதரவு? – வெளியான அறிவிப்பு!

பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியான பின்னரே ஜனாதிபதித் தேர்தலில் தாம் ஆதரவளிக்கவுள்ள வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.

வவுனியாவில் இன்று (18) இடம்பெற்ற, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.
கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் கட்சியின் செயலாளர் பா. சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன் மற்றும் இரா.சாணக்கியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

CATEGORIES
Share This