முன்னாள் JVP உறுப்பினர் ஒருவரும் ஜனாதிபதி தேர்தலில்

முன்னாள் JVP உறுப்பினர் ஒருவரும் ஜனாதிபதி தேர்தலில்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்கவிற்கான கட்டுப்பணம் இன்று (05) செலுத்தப்பட்டுள்ளது.

சிறிபால அமரசிங்க மக்கள் விடுதலை முன்னணியின் கம்பஹா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

இதற்கமைய ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை மொத்தம் 15 வேட்பாளர்கள் செலுத்தியுள்ளனர்.

இவர்களில் அரசியல் கட்சிகளை சேர்ந்த 9 வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்கள் 6 பேரும் இதுவரை கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

CATEGORIES
Share This