மொட்டுக் கட்சியின் சின்னத்திலேயே தோ்தலில் போட்டி – தனியான வேட்பாளரை முன்நிறுத்த தீர்மானம்

மொட்டுக் கட்சியின் சின்னத்திலேயே தோ்தலில் போட்டி – தனியான வேட்பாளரை முன்நிறுத்த தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை முன்நிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்தின் பின்னரே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டு சின்னத்தில் வேட்பாளரை நிறுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், இந்த தீர்மானத்தை எதிர்ப்பவர்கள் அல்லது கட்சியின் அங்கீகாரம் இன்றி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவோர் இருந்தால் உடனடியாக அந்த நபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

CATEGORIES
Share This