ஹிருணிகா பிணையில் விடுதலை: கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு

ஹிருணிகா பிணையில் விடுதலை: கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு

மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரண ராஜா இந்தத் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி தெமட்டகொட பகுதியில் இளைஞர் ஒருவரை காரில் கடத்திச் சென்றதாக ஹிருணிகா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தாக்குதல் உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுக்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 03 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், தண்டனைகளுக்கு எதிராக ஹிருணிகா பிரேமச்சந்திர மேன்முறையீடு செய்துள்ளார்.

இதனால் அவரை பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் முன்வைத்த பிணை கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This