தனிமையடைந்துள்ள டளஸ்: சஜித்துடன் இணைகிறார்

தனிமையடைந்துள்ள டளஸ்: சஜித்துடன் இணைகிறார்

சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய தீர்மானித்துள்ளார்.

சுதந்திர மக்கள சபையின் பல உறுப்பினர்கள் ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா உட்பட டளஸுடன் கடந்தகாலத்தில் இணைந்து செயல்பட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதசவுக்கு நேரடியாக ஆதரவு வழங்கியுள்ளனர்.

டளஸ் அழகப்பெரும மாத்திரம் தனியாக செயல்பட்டு வந்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் பிரதமர் பதவி வழங்க வேண்டுமென்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் பிரதி தலைவர் பதவியை வழங்க வேண்டுமென்றும் டளஸ் அழகப்பெரும கோரிக்கைகளை முன்வைத்து வந்தார்.

என்றாலும், அதனை சஜித் பிரேதாச நிராகரித்து வந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே டளஸ் அழகப்பெரும ஐக்கிய மக்கள் சக்தியில் இணையும் தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

CATEGORIES
Share This