உணவு விசமானதில் 1,000ற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

உணவு விசமானதில் 1,000ற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

தென் கொரியாவில் 1,000ற்கும் மேற்பட்டவர்கள் உணவு விசமானதால் பாதிக்கப்பட்டுள்ளனர். நம்வொன் நகரத்தில் மட்டும் 996 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.பாதிக்கப்பட்டவர்களில் 24 மாணவர்களும், ஆசிரியர்களும் உள்ளடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற உபாதைகளால் பாதிப்படைந்துள்ளனர். பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புளிக்கவைக்கப்பட்ட ஒரு வகை உணவு விசமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலானவர்கள் சிகிச்சையின் பின்னர் மருத்துவமனைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். இருப்பினும் சிலர் பாதிக்கப்பட்ட நிலையில் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This