ஐந்து பிரதமர்களை கண்ட லெரிக்கு வந்துள்ள புதிய பிரச்சினை!

ஐந்து பிரதமர்களை கண்ட லெரிக்கு வந்துள்ள புதிய பிரச்சினை!

பிரித்தானிய தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராக எண் 10 டவுனிங் தெருவுக்கு குடிபெயர்கிறார் .
இங்கு பல ஆண்டுகளாக, பிரதம மந்திரிகள் வந்து போயிருக்கிறார்கள், ஆனால் டவுனிங் தெருவில் எப்போதும் குடியிருப்பாளராக இருக்கிறார் லெரி. அதாவது லெரி என்ற செல்லப் பூனை.

ஐந்து பிரிட்டிஷ் பிரதமர்களுடன் வாழ லெரிக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது. லெரி சந்திக்கும் ஆறாவது பிரதமர் ஸ்டார்மர் ஆவார்.
கடந்த 14 ஆண்டுகால அரசியல் எழுச்சியின் போது உறுதியாக இருந்த ஒரே ஒருவராக லெரியை பிரிட்டிஷ் ஊடகங்கள் சித்தரித்துள்ளன.

லெரி ஜனவரி 13, 2007 இல் பிறந்தது. லெரிக்கு 17 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. லெரி தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பிரதம மந்திரியுடன் பழகப் போவது இதுவே முதல் முறை.

ரிஷி சுனக் பிரதமர் பதவியை விட்டு வெளியேறிய பிறகு அவரது அதிகாரபூர்வ செல்லப்பிராணியும் இல்லத்தை விட்டு வெளியேறிது , அச் செல்லப்பிராணி அவரது செல்ல நாய் நோவா, இல்லத்தை விட்டு நோவா வெளியேறியது. லெரிக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கும். ஏனெனில் நோவாவுக்கும் லெரிக்கும் ஒத்துப் போவதில்லை .

இருப்பினும்,லெரிக்கு தற்போது ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. புதிய பிரதமருடன் புதிய செல்லப்பிராணியும் வருகிறது. பிரிட்டிஷ் ஊடகங்கள், லெரிக்கு செல்லப்பிராணியால் சவால் விடப்படும் என்றும், லெரியின் போட்டியாளராக மாறக்கூடும் என்றும் குறிப்பிடுகின்றன.

இந்த செல்லப் பிராணி ஜோ ஜோ. ஜோ ஜோ லெரியைப் போலவே கொழுத்த பூனை. லெரிக்கும் ஜோ ஜோவுக்கும் சண்டை வரலாம் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன .
அதற்குக் காரணம், வேறு எந்தப் பூனையும் நம்பர் 10 டவுனிங் தெருவுக்கு அருகில் நடமாடுவதை லெரி விரும்புவதில்லை.
ஜோ ஜோ லெரியால் தொந்தரவு செய்யப்பட்டால், ரிஷி லெரியும் நம்பர் 10 டவுனிங் தெருவை இழப்பது உறுதி என பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
Share This