சம்பந்தனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நாமல்!

சம்பந்தனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நாமல்!

மறைந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கபட்டுள்ளதுடன், இன்று ஞாயிற்றுக்கிழமை (7) மாலை இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன.

அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள பூதவுடலுக்கு அரசியல்வாதிகள், பிரமுகர்கள் மற்றும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருகோணமலையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சம்பந்தனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

CATEGORIES
Share This