யாழில் குற்றச் செயல்களை கண்டுகொள்ளாத பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பு

யாழில் குற்றச் செயல்களை கண்டுகொள்ளாத பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பு

யாழ்ப்பாணம் தற்போது மிகப் பயங்கரமான சூழல் ஒன்றிற்கு அகப்பட்டுள்ளதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

மேலும், யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றவர்கள், சுதந்திரமாக நடமாடுவதாகவும் அதனை கட்டுப்படுத்தாமல், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் அசமந்த போக்குடன் உள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, அண்மையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள, சிறீதரனின் இல்லத்தின் முன்பாக 4 மோட்டார் சைக்கிள்களில் இனந்தெரியாத , ஒன்பது பேர் முகத்தையும், மோட்டார் சைக்கிள்களின் இலக்கத்தகட்டையும் கறுப்பு துணிகளால் மறைத்து, வாள்களை சுழற்றியவாறு வீதியால் செல்லும் காணொளி ஒன்று வெளியாகிருந்தது.

ஆகவே தனது வீட்டின் முன்பாக ஆயுதங்களுடன் நடமாடிய குழுவினர் தொடர்பாக சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவித்தல் ஒன்றை வழங்கவுள்ளதாக சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This