7 கோடிக்கு ஏலம்போன ‘பேய் புத்தகம்’: அப்படியென்ன ஸ்பெஷல்?

7 கோடிக்கு ஏலம்போன ‘பேய் புத்தகம்’: அப்படியென்ன ஸ்பெஷல்?

புத்தகங்கள் மனிதனின் சிறந்த நண்பன் என்று கூறலாம். ஆனால் மிகவும் பிரபலமான புத்தகமொன்று ரூபாய் 7 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றால் ஆச்சரியம் தானே?

‘Frankenstein: Or, The Modern Prometheus’ என்ற இந்தப் புத்தகம் பெண் எழுத்தாளர் மேரி ஷெல்லியால் எழுதப்பட்டு 1818ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது.

பேய் புத்தகம் என்று கூறப்படும் இதை வானத்திலிருப்பவர்கள் பலரும் படிப்பதாக ஒரு நம்பிக்கையுண்டு.

இந்தப் புத்தகத்தில் ஃபிராங்கன்ஸ்டைன் என்ற கதாபாத்திரம் அனைவராலும் பெரிதும் பேசப்படும் ஒன்றாகக் காணப்படுகிறது.

இளஞ்சிவப்பு நிறம் கொண்ட இந்த புத்தகத்தின் முதல் பிரதிகளில் இன்னும் 3 மட்டுமே இருக்கின்றன. அதில் ஒன்று தான் தற்சமயம் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இன்னும் 2 பிரதிகள் நியூயோர்க் பொது நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This