தமது அரசாங்கத்தில் பத்து முக்கிய தொழில்களில் ஒன்றாக ஆசிரியர் தொழில் மாறும்

தமது அரசாங்கத்தில் பத்து முக்கிய தொழில்களில் ஒன்றாக ஆசிரியர் தொழில் மாறும்

தமது அரசாங்கத்தின் கீழ் ஆசிரியர் தொழில் பத்து முக்கிய தொழில்களில் ஒன்றாக மாறும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கில் உள்ள சகலரும் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அதற்கு தமிழ் பேசும் பிரஜைகளின் ஆதரவையும் கோருகின்றனர்.

தேசிய மக்கள் சக்தியுடன் மோதக்கூடிய எந்த அரசியல் கட்சியும் தற்போது தென்னிலங்கையில் இல்லை.

தமிழ் பேசும் குடிமக்கள் அந்த மொழியில் அரசுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்தி தருப்படும்.

அவர்களின் மதம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாத்து அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்து தரப்படும்” என்றார்.

CATEGORIES
Share This