ஜனாதிபதி தேர்தலில் மேலும் ஒரு வேட்பாளர் – போட்டியிடப்போவதாக சமூக செயற்பாட்டாளர் ஒசால ஹேரத் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் மேலும் ஒரு வேட்பாளர் – போட்டியிடப்போவதாக சமூக செயற்பாட்டாளர் ஒசால ஹேரத் அறிவிப்பு

டயனா கமகேயிற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த சமூக செயற்பாட்டாளர் ஒசாலா ஹேரத் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

புதிய சுதந்திர முன்னணி கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் நிறைவேற்று குழு கூட்;டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சி தெரிவித்துள்ளது.

இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் டயனா கமகேயிற்கு எதிராக ஒசாலா ஹேரத் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.

CATEGORIES
Share This