‘சித்திரையில் பிறந்தது ஆபத்து’ என சிலர் கூறியதால் பச்சிளம் பேரனை கொன்ற தாத்தா கைது

‘சித்திரையில் பிறந்தது ஆபத்து’ என சிலர் கூறியதால் பச்சிளம் பேரனை கொன்ற தாத்தா கைது

‘சித்திரையில் குழந்தை பிறந்ததால் குடும்பத்துக்கு ஆபத்து’ என சிலர் கூறியதால், பச்சிளம் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற குழந்தையின் தாத்தா கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் இந்தியாவின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை உட்கோட்டை கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
இப்பகுதியை சேர்ந்த வீரமுத்து என்பவரின் மகள் சங்கீதாவுக்கு (21). கடந்த சித்திரை மாதம் சங்கீதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது , சங்கீதா தனது தந்தை வீட்டில் குழந்தையுடன் தங்கியிருந்தார்.

இந்நிலையில், கடந்த 14-ம் திகதி அதிகாலை குளியலறையில் வாளி தண்ணீரில் சங்கீதாவின் குழந்தை துணியில் சுற்றப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. தகவலறிந்த ஜெயங்கொண்டம்பொலிஸார் அங்கு சென்று குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்றது, சங்கீதாவின் தந்தை வீரமுத்து என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து பொலிஸார் கூறியதாவது: சங்கீதாவுக்கு சித்திரை மாதம் குழந்தை பிறந்துள்ளதால், தாய்வழி, தந்தைவழி என இரு குடும்பத்தினருக்கும் ஆகாது என்றும், பெற்றோர் அல்லது தாத்தாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் வீரமுத்துவிடம் சிலர் கூறி உள்ளனர்.

மேலும், மகளின் திருமணம், பிரசவம் என ஏற்கெனவே அதிக கடன் இருந்த நிலையில், இந்த குழந்தை இருந்தால் இன்னும் கூடுதல் கடன் ஏற்படுவதுடன், உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கருதியதால், குழந்தையை துணியில் சுற்றி வாளி தண்ணீரில் அழுத்தி கொன்றதாக வீரமுத்து வாக்குமூலம் அளித்துள்ளார் என தெரிவித்தனர்.

CATEGORIES
Share This