ஈழத் தமிழ் பெண்களின் உரிமைக்காக குரல் சுகந்தினிக்கு தென்கொரியா விருது வழங்கி கௌரவிப்பு

ஈழத் தமிழ் பெண்களின் உரிமைக்காக குரல் சுகந்தினிக்கு தென்கொரியா விருது வழங்கி கௌரவிப்பு

ஈழத் தமிழ் பெண்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர் சுகந்தினி மதியமுதன் தங்கராஜிற்கு தென்கொரியாவின் மே18 நினைவு அறக்கட்டளை 2024 குவாங்ஜூ விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தினதும் அதன் பாதுகாப்பு படையினரினதும் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டுள்ள -யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்களின் உரிமைகள் அவர்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்காக அமரா என்ற அமைப்பை ஆரம்பித்து சுகந்தினி தனது செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றார்.

சுகந்தினி 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பாலியல் வன்முறைகளில் இருந்து தப்பியவர்.

இராணுவத்திடம் அனைத்தையும் இழந்த பல பெண்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்துபவராக துணிச்சல் தைரியத்தின் அடையாளமாக சுகந்தினி காணப்படுகின்றார் என மே 18 நினைவு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

சுகந்தினியின் செயற்பாடுகள் எங்கள் அமைப்பின் உணர்வுகளோ நெருக்கமானதாக காணப்படுகின்றது என கருதுகின்றோம் என தெரிவித்துள்ள மே 18 நினைவு அறக்கட்டளை இலங்கையில் தமிழ் பெண்களின் மனித உரிமை நிலவரத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான அவரது முயற்சிகளிற்கு உறுதியான ஆதரவை வழங்குகின்றோம் எனவும் தெரிவித்துள்ளது.

சர்வதேச சமூகத்தின் அக்கறையும் கவனமும் ஒத்துழைப்பும் ஆதரவும் தமிழர் பகுதிகளில் பாதுகாப்;பு படையினரின் அக்கிரமங்கள் குறி;த்த வெளிச்சத்திற்கு வருவதற்கு உதவியாக அமையும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இரண்டு காரணங்களிற்காக நான் விடுதலை இயக்கத்தில் இணைந்தேன் என தெரிவித்துள்ள சுகந்தினி ஒன்று தமிழர்களை சிங்கள அரசின் ஒடுக்குமுறையிலிருந்து விடுவிப்பது மற்றையது இலங்கையின் இராணுவ இயந்திரத்தின் பாலியல் வன்முறைகளில் இருந்து தமிழ் பெண்களை பாதுகாப்பது என தெரிவித்துள்ளார்.

2009 இல் ஆயுதமோதல் முடிவிற்கு வருவதற்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆட்சியின் கீழ் தமிழ் பெண்களின் பாதுகாப்பும் கௌரவமும் குறிப்பிடத்தக்க அளவிற்கு பாதுகாக்கப்பட்டது என சுகந்தினி தெரிவித்துள்ளார்.

பெண்கள் இரவில் அச்சமின்றி நடமாட முடிந்தது அவர்கள் தன்னிறைவு கொண்டவர்களாக சுதந்திரமாக வாழக்கூடியவர்களாக வலுப்படுத்தப்பட்டார்கள் பெண்களின் சுயவேலைவாய்ப்பிற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனஇசுய பாதுகாப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன ஆணாதிக்க சமூகத்தின் மூலம் உருவாக கூடிய சமூக தடைகளை உடைப்பதற்கான விழிப்புணர்வு வழங்கப்பட்டது எனவும் சுகந்தினி தெரிவித்துள்ளார்.

அனைத்து துறைகளிலும் பெண்களிற்கு சமவாய்ப்பு வழங்கப்பட்டது இதுமெல்ல மெல்ல ஆணாதிக்க சமூகஉணர்வுகள் மறைவதற்கு வழிவகுத்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் 2009 இல் இடம்பெற்ற இனப்படுகொலையுடன் முடிவடைந்த இராணுவநடவடிக்கையின் பின்னர் நிலைமை மாற்றமடைந்ததுஇஎன தெரிவித்துள்ள சுகந்தினி பாலியல் வன்முறைகள் சித்திரவதைகள் போன்ற சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகின இவை குழந்தைகள் வயது முதிர்ந்தவர்களிற்கு எதிராகவும் இழைக்கப்பட்டன என தெரிவித்துள்ளார்.

தான் கைதுசெய்யப்பட்டு வவுனியாவின் மிக மோசமான ஜோசப் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டதை சுகந்தினி நினைவு கூர்ந்துள்ளார்.

அங்கு மிகவும் பயங்கரமான சித்திரவதைகளை எதிர்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This