வடக்குக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில்; முல்லையில் இரு நிகழ்வுகளில் பங்கேற்பார்

வடக்குக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில்; முல்லையில் இரு நிகழ்வுகளில் பங்கேற்பார்

வடக்குக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்துக்கு பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் அன்று காலை 9.30 மணிக்கு புதுக்குடியிப்பு மத்திய கல்லூரி கலையரங்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் எண்ணக் கருவின்படி செயற்படுத்தப்படுகின்ற சிக்கலில்லா இல்லத்தின் முழு உரிமையை அனைவருக்கும் உரித்தாக்கும் உன்னத நோக்கில் உதயமான உருமய(உரித்து) தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் இலவச காணி அளிப்பு பத்திரம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

சுற்றுலாத்துறை மற்றும் காணி ,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் அழைப்பின் பெயரில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கு பற்றலுடன் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

தொடர்ந்து அன்று மாலை மாங்குளம் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வடக்கின் மிகப் பிரமாண்டமான மாங்குளம் புனர்வாழ்வு மருத்துவமனையை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.

CATEGORIES
Share This