முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்: தீவிரமாக கண்காணிக்கும் சர்வதேச ஊடகங்கள்

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்: தீவிரமாக கண்காணிக்கும் சர்வதேச ஊடகங்கள்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுவதை சர்வதேச ஊடகத்தினர் நேரடியாக கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்கள் அழிப்பு தினமான மே மாதம் 18 ஆம் திகதி, தமிழ் மக்கள் அனைவரும் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தி வருவது வருடா வருடம் வழக்கமான செயற்பாடாக மாறியுள்ளது.

இந்நிலையில் மே மாதம் தொடங்கியதில் இருந்து முள்ளிவாய்க்கால் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகின்றது.இதனை இம் முறை சர்வதேச ஊடகங்கள் நேரடியாக கண்காணித்து வருகின்றது.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பொதுசந்தை கட்டடப்பதிக்கு அருகில் இன்று 16 ஆம் திகதி வியாழக்கிழமை முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிவதற்கான ஆயத்த வேலைகள் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த வேலைகளையும், முள்ளிவாய்க்கால் முக்கிய நினைவிடங்கள் மற்றும் தடய பொருட்களையும் சர்வதேச ஊடகத்தினர் இன்றைய தினம் நேரடியாக கண்காணித்து வருகின்றனர்.

CATEGORIES
Share This