மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள இராமர் பால வேலைத்திட்டம்; உறுதியளித்த இந்திய உயர்ஸ்தானிகர்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள இராமர் பால வேலைத்திட்டம்; உறுதியளித்த இந்திய உயர்ஸ்தானிகர்

இராமர் பாலம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்று மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து வழிபட்டதன் பின்னர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்ட கப்பல் சேவை தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் காலத்தில் மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் நோக்கிய ரயில் சேவையினை விஸ்தரிப்பதற்கு இந்தியா நடவடிக்கையெடுக்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் ஏந்திரி என்.சிவலிங்கம், மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This