EPAPER
“70 முறை பிரதமர் பதவியை நிராகரித்தேன்”

“70 முறை பிரதமர் பதவியை நிராகரித்தேன்”

தனக்கு 70 தடவைகள் பிரதமர் பதவி வழங்கப்பட்டதாகவும் எனினும் அதனை நிராகரித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே திக கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“2018 ஆம் ஆண்டு அரசியலமைப்பு நெருக்கடிக்கு முன்னர் 10 முறை பிரதமர் பதவியை ஏற்குமாறு கூறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், 2018 அரசியலமைப்பு நெருக்கடிக்குப் பிறகு தனக்கு 61 முறை பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டை வழிநடத்துவதற்கு குறுக்கு வழிகளை மேற்கொள்ள தாம் தயாராக இல்லை எனவும் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தனது ஆதரவாளர்களை அமைதியாக இருக்குமாறு கோரிக்கை விடுத்த அவர், விவைில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் அமையும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஊழலை எதிர்த்து நாட்டை அபிவிருத்தி செய்யும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This