இனி ராஜபக்சக்கள் இல்லை: பொதுஜன பெரமுனவின் ஆதரவு ரணிலுக்கு

இனி ராஜபக்சக்கள் இல்லை: பொதுஜன பெரமுனவின் ஆதரவு ரணிலுக்கு

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

ராஜபக்சக்களின் தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பான அரசியல் பேச்சுக்கள் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், 

ராஜபக்ஷ ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.ராஜபக்சக்கள் இனி இல்லை. 

மகிந்த ராஜபக்ச அடுத்த தேர்தலுக்கு வரமாட்டார். அவர் ஓய்வு பெறுவார்.

சமல் ராஜபக்சவும் ஓய்வு பெறுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

CATEGORIES
Share This