ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரிக்க புதிய குழு: தே.ம.ச தெரிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரிக்க புதிய குழு: தே.ம.ச தெரிவிப்பு

பதவிக்கு வந்தால் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பாகப் புதிய குழு ஒன்றை நியமித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் ஐந்து வருட பூர்த்தியை முன்னிட்டு 7அம்ச அறிக்கையொன்றை தேசிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்போம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்போம் எனவும் அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது

CATEGORIES
Share This