மியன்மாரில் மீட்கப்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பினர்: பாதுகாப்பு தரப்பு வாக்குமூலம் பெறும் நடவடிக்கையில்

மியன்மாரில் மீட்கப்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பினர்: பாதுகாப்பு தரப்பு வாக்குமூலம் பெறும் நடவடிக்கையில்

மியான்மரின் மியாவாடி இணையக்குற்றப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 8 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

தாய்லாந்தில் இருந்து யூ.எல் – 403 எனும் விமானத்தின் மூலம் இன்று (18) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்படி, ஆறு ஆண்களும் இரண்டு பெண்களும் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மியான்மரின் மியாவாடி இணையக்குற்றப் பகுதியில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்கள் கடந்த மார்ச் மாதம் 4 ஆம் திகதி பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டனர்.

இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படும் நொக்கில் இவர்கள் மியாவாடி மத்திய பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.

பாதுகாப்பு நிலைமை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மியான்மரில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் அவர்களை தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுத்தது.

இதன்படி, தாய்லாந்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட 08 இலங்கையர்களும் இன்று இலங்கையை வந்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்களிடமிருந்து வாக்குமூலங்களை பாதுகாப்பு தரப்பினர் பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
Share This