![மே18 – உணர்வெழுச்சி நினைவேந்தல்: பிரித்தானிய தமிழருக்கு விடுக்கப்பட்டுள்ள அறைகூவல் மே18 – உணர்வெழுச்சி நினைவேந்தல்: பிரித்தானிய தமிழருக்கு விடுக்கப்பட்டுள்ள அறைகூவல்](https://uthayamnews.com/wp-content/uploads/2024/04/May18-Memorial.jpg)
மே18 – உணர்வெழுச்சி நினைவேந்தல்: பிரித்தானிய தமிழருக்கு விடுக்கப்பட்டுள்ள அறைகூவல்
இலங்கையில் தமிழர் இருப்பை அழிக்கும் முயற்சியல் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர முன்வருமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது
முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற தமிழின அழிப்புப் போரின் 15ஆம் ஆண்டு நினைவு நாள், பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
எனவே பிரித்தானிய வாழ் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் அணிதிரளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
![Oruvan](https://gumlet.assettype.com/oruvan/2024-04/9cfe7d2a-c953-471e-8c3e-dce013f74973/7d36399c_9ff1_4536_9782_436fd924961c.jpeg?format=webp&w=1000&q=80)
மத்திய லண்டனில் Charing Cross நிலக்கீழ் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் 1“TRAFALGAR SQUARE”, London WC2N 5DN இல் எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு பொதுக் கூட்டத்துடன் நிகழ்வுகள் ஆரம்பித்து இரவு 7.00 மணிவரை நினைவு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
“தாயக விடுதலைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுப்போம், அயராது செயல்படுவோம், சர்வதேசத்தை எம்பக்கம் திருப்புவோம்“ என அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.