சிரியாவில் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

சிரியாவில் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. வான்வழித் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும்போது, “இஸ்ரேலை ஈரான் விரைவில் தாக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

நான் உறுதியான தகவலுக்குள் போக விரும்பவில்லை. ஆனால், இஸ்ரேல் மீது ஈரான் காலதாமதமின்றி விரைவில் தாக்குதல் நடத்தக்கூடும். இந்த தருணத்தில் ஈரானுக்கான என்னுடைய செய்தி, போர் வேண்டாம் என்பதுதான்.

இஸ்ரேலின் பாதுகாப்புக்காக நாங்கள் அர்ப்பணித்து இருக்கிறோம். இஸ்ரேலுக்கு ஆதரவை வழங்குவோம். இஸ்ரேல் பாதுகாப்புக்கு நாங்கள் உதவுவோம். ஈரான் வெற்றி பெறாது என்றார்.

ஏற்கனவே இஸ்ரேல்- காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையே போரால் அந்த பிராந்தியத்தில் பதற்றம் இருந்து வரும் நிலையில் தற்போது இஸ்ரேல்- ஈரான் மோதல் மேலும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

இதையடுத்து இஸ்ரேல், ஈரானுக்கு மறுஉத்தரவு வரும்வரை செல்ல வேண்டாம் என்று இந்தியர்களை மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல் பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகளும் தங்களது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு இயக்கமான ஹஸ்புல்லா அங்கிருந்து வடக்கு இஸ்ரே லுக்குள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் சில ஏவுகணைகளை இஸ்ரேல் இடைமறித்து அழித்தது.

CATEGORIES
TAGS
Share This