உதயம் இணையத்தின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

உதயம் இணையத்தின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மக்கள் புத்தாண்டு பிறக்கிற போது புதுநம்பிக்கையோடு நம்பிக்கை கொண்ட தெய்வத்தை நினைத்து மருத்துநீர் வைத்து நீராடி புத்தாடையுடுத்தி சித்திரைப்புத்தாண்டைக் கொண்டாடுவது பாரம்பரிய வழமை.

இலங்கையில் நல் ஆட்சியில்லா நாடாக எதுவுமில்லை என்ற ஏக்கமும் அன்றாடம் போராட்டங்கள் மலிந்து பசி பட்டினியோடு உயிருக்குப் போராடிக் கொண்டு கொந்தளிப்புமாய் அல்லலுறும் அவலமும் எதிர்காலமும் இல்லா மக்களாய் தெருவெல்லாம் போராட்டங்கள் நிறைந்து விட்ட நிலையில் மனநிறைவோடு மகிழ்ச்சியோடு புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல முடியவில்லை.

இருந்தாலும் மனிதகுல நாகரிகம், மக்களின் பண்பாடு கொண்டு சித்திரைப் புத்தாண்டில் புதுநம்பிக்கையோடும், புத்தெழுச்சியோடும் தமிழர் தம் தேசத்தில் விடுதலை பெற்ற மக்களாய் எழுவோம் வாழ்வோம் எனத் திடசங்கற்பம் கொள்வோம். அந்த நம்பிக்கையோடு சித்திரைப் புத்தாண்டில் எம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

அனைவருக்கும் உதயம் இணையத்தின் மகிழ்ச்சி நிறைந்த சௌபாக்கியமான சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

CATEGORIES
TAGS
Share This