இலங்கை வந்ததன் பின் பிரித்தானியா செல்லும் முருகன்!

இலங்கை வந்ததன் பின் பிரித்தானியா செல்லும் முருகன்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இலங்கைக்கு திரும்புவதற்காக சென்னை விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர்.

தமிழக அரச அதிகாரிகள் அவர்களை விமான நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு வந்ததன் பின்னர் பிரித்தானியாவில் உள்ள தமது மகளுடன் வாழ்வதற்கு முயற்சிக்கவுள்ளதாக முருகன் செய்தி சேவை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தை மிகவும் மகிழ்ச்சியாக உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This