யாழில் விமானப்படையின் கண்காட்சியில் பெண் கைது!

யாழில் விமானப்படையின் கண்காட்சியில் பெண் கைது!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் இலங்கை விமானப்படையின் கண்காட்சிக்கு கேரள கஞ்சாவுடன் சென்ற பெண் கைது செய்யப்பட்டார்.

நயினாதீவைச் சேர்ந்த 26 வயது பெண்ணே 2 கிலோ கிராம் எடையுள்ள கேரள கஞ்சாவுடன் கைதாகியுள்ளார்.

இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று (10) ஐந்தாவது நாளாக இடம்பெற்று வருகிறது.

இதன்போது கண்காட்சி பிரதான நுழைவாயிலில் கண்காட்சிக்கு பொதியுடன் வந்த பெண்ணை சோதனையிட்டபோதே கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

கைதான பெண் விமானப்படையினரால் யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This