சாந்தனின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன!

சாந்தனின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன!

உடல்நலக்குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன.

இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளன.

இறுதிக் கிரியைகள் நிறைவுப் பெற்றதும் பூதவுடல் உடுப்பிட்டி சனசமூக நிலையத்திற்கு எடுத்துக் செல்லப்பட்டு அங்கு நினைவேந்தல் இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து சாந்தனின் பூதவுடல் பூர்வீக இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர், இறுதி யாத்திரை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாந்தனின் பூதவுடல் வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This