காலி சிறையில் மேலும் ஒரு கைதி மூளைக் காய்ச்சலால் பாதிப்பு!

காலி சிறையில் மேலும் ஒரு கைதி மூளைக் காய்ச்சலால் பாதிப்பு!

காலி சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மற்றுமொரு கைதி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த கைதி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக சிறைச்சாலைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் மூளைக் காய்ச்சல் நோயாளிகள் வேறு யாரும் சிறைச்சாலையில் அடையாளம் காணப்படவில்லை என்றும் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

காய்ச்சல் நிலைமை காரணமாக இதற்கு முன்னரும் காலி சிறைச்சாலை கைதியொருவரும் மாத்தறை சிறைச்சாலை கைதிகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This