ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதல்: உக்ரைனில் 8 பேர் பலி!

ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதல்: உக்ரைனில் 8 பேர் பலி!

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடந்து 2 ஆண்டு கடந்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் நிதி உதவி அளித்து வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனில் ஒடேசா நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ரஷ்யா டிரோன் தாக்குதலை நடத்தியது. இதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 8 பேர் பரிதாபமாக பலியானார்கள். டிரோன் தாக்குதலில் 18 வீடுகள் சேதமடைந்தன.

இதுதொடர்பாக, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறுகையில், உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் தாமதப்படுத்துவதாகவும், ஆயுதங்களை விரைவாக வழங்கி இருந்தால் ரஷ்ய டிரோன் தாக்குதலை தவிர்த்திருக்கலாம் என தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This