எரிபொருள் விலை திருத்தம் குறித்து வெளியான செய்தி!

எரிபொருள் விலை திருத்தம் குறித்து வெளியான செய்தி!

மார்ச் மாதத்துக்கான எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மாதாந்த விலை சூத்திரத்தின்படி, திருத்தம் செய்யப்பட்ட எரிபொருள் விலைகள் நேற்று வியாழக்கிழமை (29) இரவு அறிவிக்கப்பட இருந்தது.

இருப்பினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மார்ச் மாதத்துக்கான எரிபொருள் விலையை ஏற்கனவே இருந்த விலையில் வைத்திருக்க முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில், லங்கா ஐ.ஓ.சி. மற்றும் சினோபெக் ஆகியவை மார்ச் மாதத்துக்கான எரிபொருள் விலையில் திருத்தம் தொடர்பாக எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This