இலங்கை கடல் எல்லையில் கறுப்புக்கொடி போராட்டம்!

இலங்கை கடல் எல்லையில் கறுப்புக்கொடி போராட்டம்!

இலங்கை கடல் எல்லையில் எதிர்வரும் 03ஆம் திகதி கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாகங்களின் சம்மேளன அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அதன் பிரதிநிதிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் கடற்பரப்புக்குள் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் இந்த கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This