EPAPER
யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா விற்பனை ; ஒருவர் கைது!

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா விற்பனை ; ஒருவர் கைது!

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட முற்பட்ட நபர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட வண்ணார்பண்ணை, காரைக்காட்டு பகுதியில் நேற்று (18) மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த நபரிடமிருந்து 05 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கொக்குவில் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This