வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி கோரிய போராட்டத்திற்கான அழைப்பு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி கோரிய போராட்டத்திற்கான அழைப்பு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு சர்வதேச நீதி கோரி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறு வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி அழைப்பு விடுத்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (17) இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடனான ஊடக சந்திப்பில் கருத்த தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும், “காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்பதற்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் நிறைவடைந்து எட்டு ஆண்டுகள் ஆகின்றன.

இந்நிலையில் எங்களுடைய பிள்ளைகளுக்கு இலங்கை அரசாங்கம் நீதி வழங்காத நிலையில் சர்வதேசத்திடம் நீதியை கோரி நிற்கின்றோம்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This