துபாயில் கைது செய்யப்பட்ட இலங்கை பாதாள உலகக் குழு உறுப்பினர்!

துபாயில் கைது செய்யப்பட்ட இலங்கை பாதாள உலகக் குழு உறுப்பினர்!

துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட “பியுமா”வை தடுத்து வைத்து விசாரணை செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதவான் நீதிமன்றில் இது தொடர்பில் சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.

குறித்த 72 மணித்தியாலங்கள் நேற்றிலிருந்து கணக்கிடப்படுகிறது.

பியூமி ஹஸ்திக என்ற ‘பியுமா’ குடு சலிந்துவின் என்ற போதைப்பொருள் வியாபாரியின் முக்கிய உதவியாளராக கருதப்படுகிறார்.

சந்தேக நபர் கடந்த 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி துபாய் நோக்கி தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This