இலங்கை தனிமைப்படுத்தப்பட்ட நாடாக செயற்பட முடியாது – அனுரகுமார

இலங்கை தனிமைப்படுத்தப்பட்ட நாடாக செயற்பட முடியாது – அனுரகுமார

இலங்கை இனி ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நாடாக செயற்பட முடியாது எனவும் ஆகவே நாட்டில் விரும்பிய மாற்றத்தை அடைவதற்கான, சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கு இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதே தமது நோக்கமாகும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியதும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், இந்தியா பிராந்தியத்தில் வளர்ந்து வரும் நாடாகவும், தகவல் தொழில்நுட்பத் துறையில் நிபுணத்துவம் பெற்ற நாடாகவும் விளங்குகிறது.

எனவே இலங்கை, இந்தியாவிடமிருந்து இருந்து ஆதரவைப் பெற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

76 ஆண்டு கால அழிவுகரமான அரசியல் கலாசாரத்தை நாம் நிறுத்த வேண்டும்.

மக்கள் பல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர்.

அந்த மாற்றத்தை ஏற்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த எதிர்பார்ப்புக்கு தலைமைத்துவத்தை வழங்கி நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தமது நோக்கமாகும்.

அதற்கு சர்வதேச ஆதரவு தேவை எனவும் தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு சில துறைகளில் மூலதனமும் தொழில்நுட்பமும் தேவை.

சந்தையை விரிவுபடுத்த சில நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும்.

உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக இருப்பதன் மூலம் நமது இலக்குகளை அடைய முடியாது.

எனவே, உறவுகளை வலுப்படுத்துவதே தமது இலக்கு என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டிற்குச் செல்வதற்காகவோ அல்லது இராஜதந்திர சந்திப்புகளுக்காகவோ, தேசிய மக்கள் சக்தி அதன் அரசியல் அல்லது பொருளாதாரக் கொள்கைகளை மாற்றிக்கொள்ளாது என்று அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தமது கட்சியின் சொந்த நிகழ்ச்சி நிரலின்படி தேசியத் திட்டத்திற்கு ஏற்ப இந்தியாவின் ஆதரவைப் பெற முடியும் என தாம் நம்புவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This