சிலியில் திடீர் காட்டுத்தீ : 46 பேர் பலி!

சிலியில் திடீர் காட்டுத்தீ : 46 பேர் பலி!

அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் மத்திய சிலி ஆகிய பகுதிகளில் இருக்கும் வனப்பகுதிகள் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கின. இதனால் அப்பகுதி முழுவதும் கரும் புகையால் சூழ்ந்துள்ளது.

திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் அங்கிருந்த 1,000 வீடுகளுக்கு மேல் எரிந்து சேதமடைந்தன. இந்த தீவிபத்தில் சிக்கி 46 பேர் பலியாகினர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விமானங்களின் உதவியுடனும் தண்ணீர் எடுத்துவரப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகிறது.

தீ பரவ வாய்ப்புள்ள இடங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறனர்.

CATEGORIES
TAGS
Share This