விஸ்வ புத்தருக்கு மீண்டும் விளக்கமறியல்!

விஸ்வ புத்தருக்கு மீண்டும் விளக்கமறியல்!

“விஸ்வ புத்தர்” என்ற தேரரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை (24) நீதிமன்றில் இவர் ஆஜர்படுத்தப்பட்ட போது கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மேலும் சந்தேக நபரை எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

“விஸ்வ புத்தர்” என்று தன்னை அடையாளப்படுத்தி இவர் கடந்த வாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

CATEGORIES
TAGS
Share This