திருகோணமலையில் அனுஸ்டிக்கப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 18வது ஆண்டு நினைவு தினம்!

திருகோணமலையில் அனுஸ்டிக்கப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 18வது ஆண்டு நினைவு தினம்!

திருகோணமலையில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவு தூபியில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பனவற்றின் ஏற்பாட்டில் இவ் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அமரர் சுகிர்தராஜனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் வருகை தந்தோர் அனைவராலும் மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This