கொலம்பியாவில் நிலச்சரிவு – 18 போ் உயிரிழப்பு!

கொலம்பியாவில் நிலச்சரிவு – 18 போ் உயிரிழப்பு!

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 18 போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்த நாட்டின் தேசிய பேரிடா் மேலாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

குயிபோ, மெடெலின் நகரங்களுக்கு இடையிலான மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் புதையுண்டு 18 போ் உயிரிழந்தனா்; 35 போ் காயமடைந்தனா். இந்தச் சம்பவத்தில் மேலும் சிலா் மாயமாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவா்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் கூறினா்.

இந்தச் நிலச்சரிவுக்கான காரணம் குறித்து அவா்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும், பாதுகாப்புத் துறை அமைச்சகம் தனியாக வெளியிட்டிருந்த அறிக்கையில், மழையால் மீட்புப் பணிகளில் இடா்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, மழை காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This