யாழ். கோப்பாயில் கசிப்புடன் நால்வர் கைது !

யாழ். கோப்பாயில் கசிப்புடன் நால்வர் கைது !

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருநெல்வேலி சந்தையில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட செருப்பு தைக்கும் நபர் ஒருவரை யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர் .
யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது ,அவர் இன்னொரு இடத்தில் கசிப்பினை வாங்கி வந்து தினமும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .

பின்னர் கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் உதவியுடன் விற்பனை செய்யும் இடத்தை சுற்றிவளைத்த பொழுது கோப்பாய் மத்தி சூசியப்பர் கோவிலடியில் பெண்ணொருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து 19 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைக்காக அவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This